Pinarayi Vijayan on Delimitation: தொகுதி மறுசீரமைப்பினால் தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இது தொங்கும் கத்தி என்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று (மார்ச் 22, 2025) கூறினார்.
Pinarayi Vijayan on Delimitation: தொகுதி மறுசீரமைப்பினால் தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இது தொங்கும் கத்தி என்றும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று (மார்ச் 22, 2025) கூறினார்.
Published on: March 22, 2025 at 11:01 pm
Updated on: March 22, 2025 at 11:17 pm
சென்னை, மார்ச் 22. 2025: மத்திய அரசின் பாராளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய முன்மொழிவு, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (மார்ச் 22, 2025) சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) கூட்டத்தில் பேசிய விஜயன், எல்லை நிர்ணய செயல்முறை ஆலோசனை இல்லாமல் முன்னோக்கி தள்ளப்படுகிறது என்றார்.
தொடர்ந்து, தென் மாநிலங்களின் மீது தொங்கும் “டமோக்கிள்ஸின் வாள்” என்றும் விவரித்தார். இது குறித்து பேசிய அவர், “நிதிக் கொள்கைகள் முதல் மொழிக் கொள்கைகள், கலாச்சாரக் கொள்கைகள், இப்போது பிரதிநிதித்துவத்தை நிர்ணயிப்பது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பையும் ஜனநாயகக் கட்டமைப்பையும் சீர்குலைக்கின்றன என்றார்.
தொடர்ந்து, இதை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது” என்றார். இதையடுத்து, கூட்டாட்சி என்பது ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ஒரு சலுகை அல்ல, மாறாக மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமை என்று பினராயி வலியுறுத்தினார்.
இது பற்றி பினராய் விஜயன், “எங்கள் கூட்டு எதிர்ப்பு என்பது இடங்களைப் பற்றியது மட்டுமல்ல; இது பன்முகத்தன்மை கொண்ட மற்றும் உள்ளடக்கிய ஜனநாயகமாக இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கான போராட்டம்” என்றார்.
மேலும், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்றார். மேலும், தொகுதி சீரமைப்பு பாரதிய ஜனதா கட்சி அதிக பலத்துடன் காணப்படும் வட இந்தியாவில் அவர்களுக்கு பலன் அளிக்கும் என்றார்.
இதையும் படிங்க : திருச்சி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: மார்ச் 29 முதல் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com