வீட்டின் வெளியே துணி காயப்போட்ட பெண்.. அத்துமீறிய வி.சி.க பிரமுகர்!

VCK leader for allegedly assaulting woman: வீட்டின் வெளியே துணி காயப்போட்ட பெண்ணிடம் வி.சி.க பிரமுகர் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Published on: April 19, 2026 at 9:40 pm

சென்னை, ஏப்.19, 2026: வீட்டின் வெளியே துணி காயப்போட்ட பெண்ணிடம் வி.சி.க பிரமுகர் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் தலைவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “கரூர் மாவட்டம் குளித்தலையில், வீட்டின் வெளியே துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், மது போதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் என்ற நபர்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை ட்வீட்

திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பதை விட, அவர்களைக் காப்பாற்றுவதில்தான் திமுக அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், வீட்டுக்குள் அத்துமீறி பாலியல் தாக்குதல் நடத்தும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எந்த பயமும் இல்லாமல் போய்விட்டது.

நமது வீட்டுப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், வரும் தேர்தலில், திமுக ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டே ஆகவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா? சுந்தர் சி-க்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com