கோவையில், காதல் திருமணம்.. சொந்த தம்பி என்றும் பாராமல்… மரண தண்டனை விதித்த நீதிபதி!

Honor killing case: கோவையில் காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

Published on: January 29, 2025 at 7:53 pm

கோவை ஆணவக்கொலை வழக்கு: கோவை மாவட்டத்தில் 22 வயதான இளைஞர் மற்றும் 16 வயதான அவரின் காதலி 2019 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக 22 வயது இளைஞரின் சகோதரர் வினோத்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

வினோத்குமார் தினசரி கூலித் தொழிலாளி ஆவார். தனது தம்பி வேறு சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் இந்த கொடூரக் கொலையை அவர் அரங்கேற்றி இருந்தார் என போலீசார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் மேலும் மூன்று பேரும் கைதாகி இருந்தனர். அவர்கள் போதிய ஆதாரம் இல்லாததால் தற்போது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் முக்கிய குற்றவாளியான வினோத்குமாருக்கு நீதிபதி விவேகானந்தன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. வாடகை வீட்டில் தங்கி இருந்த தனது தம்பியை அவர் படுகொலை செய்தார். இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த 16 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த இரட்டை ஆணவக் கொலை வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். அப்போது வினோத் குமார் குற்றவாளி என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தண்டனை விவரம் இன்று வெளியானது. இதில் முதன்மை குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க தென்காசியில் பரபரப்பு.. 10 லிட்டர் பெட்ரோல்.. கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com