தென்காசியில் பரபரப்பு.. 10 லிட்டர் பெட்ரோல்.. கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்!

Tenkasi Kashi Vishwanathar Temple | தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு தீ வைக்கப்பட்ட விவகாரத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Published on: January 4, 2025 at 10:47 pm

Updated on: January 6, 2025 at 9:21 am

தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் | தென்காசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் நுழைவு வாயில் வெளியே தரையில் பெட்ரோல் ஊற்றி இன்று மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபரை தென்காசி போலீசார் சனிக்கிழமை (ஜன. 4, 2025) காலை கைது செய்தனர்.

அவர், தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கேழையப்பிள்ளையூரைச் சேர்ந்த ஆனந்தபாலன் (31) என்பவர் ஆவார். இவர், சனிக்கிழமை காலை 8 மணியளவில் கோயிலுக்கு வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் சன்னதிக்கு அருகில் சிறிது நேரம் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில், நுழைவாயிலுக்கு வெளியே உள்ள கிரானைட் தரையில் பிளாஸ்டிக் கேனில் கொண்டு வந்திருந்த 10 லிட்டர் பெட்ரோலை ஊற்றினார். பின்னர் அவர் தரையில் தீ வைத்தார்.

மார்கழி உற்சவத்தின் ஒரு பகுதியாக பக்தர்கள் கோலம் வரைந்திருந்த இடத்தில் இந்தச் சம்பவம் நடந்திருந்தது. இந்த நிலையில், கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில், ஆனந்த பாலன் கைது செய்யப்பட்டார். அவரிடம், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ் இனியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தென்காசி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சற்று மனநிலை குன்றியவர் எனத் தெரியவந்ததாக கூறப்படுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com