Vanathi Srinivasan | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், 18 வகையான பாரம்பரிய தொழில்களுக்காக “PM விஸ்வகர்மா திட்டம்’ என்ற புதிய திட்டத்தை 2023 செப்டம்பர் 17 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டது. நாட்டில் இருக்கும் பிற மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் இத்திட்டம் தமிழ்நாட்டில் இதுவரை தமிழக அரசு அமல்படுத்தாததால் இலட்சக்கணக்கான பாரம்பரிய கைவினை தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பலனை பெறமுடியாமல் தவிக்கின்றார்கள். அதனால் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Annamalai: ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்….
Bomb threat to M K Stalins house : சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடு மற்றும் பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்…
Nainar Nagendran: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஹெல்மெட் வழங்கினார்….
Vanathi Srinivasan: “திராவிட மாடல் என்றாலே டிராமாதான்” என பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்….
Nainar Nagendran: “UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்களை இழுத்தடிக்கும் திமுக அரசு” என விமர்சித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்