Vanathi Srinivasan | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், 18 வகையான பாரம்பரிய தொழில்களுக்காக “PM விஸ்வகர்மா திட்டம்’ என்ற புதிய திட்டத்தை 2023 செப்டம்பர் 17 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டது. நாட்டில் இருக்கும் பிற மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் இத்திட்டம் தமிழ்நாட்டில் இதுவரை தமிழக அரசு அமல்படுத்தாததால் இலட்சக்கணக்கான பாரம்பரிய கைவினை தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பலனை பெறமுடியாமல் தவிக்கின்றார்கள். அதனால் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
L Murugan On Kamaraj : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் காமராஜர் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்….
Parandur Row : பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என தமிழக பாஜக…
Nainar Dares Congress : தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த தயாரா என காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு…
M. Thamimun Ansari : தி.மு.க., பா.ஜ.க கூட்டணி என்று திட்டமிட்டு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்….
Nainar Nagendran: நயினார் நாகேந்திரன் வெங்கட நாராயணாவின் நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், இது தமிழ் மக்களுக்கு நேரடியான துரோகம் எனக் கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்