Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முத்துசிவா (21), உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இசக்கிபாண்டியன் (19), உக்கிரன்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த பட்டுசாமி என்பவரின் மகன் இசக்கிபாண்டி என்ற விக்னேஷ் (18), அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, நந்தன்தட்டை, நடுத் தெருவை சேர்ந்த வால சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கிபாண்டி (18) ஆகிய நான்கு பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது மானூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்
Woman Killed in namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7…
Coimbatore Blast Case: 2022 கோவை குண்டுவெடிப்பு வழக்கில், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
Grindr scams: கிரெண்டர் செயலியால் தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Jewellery Theft: கும்பகோணத்தில் அண்டை வீட்டில் அடிக்கடி வந்து பழகிய இளம்பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி 21 கிராம் நகையை திருடியதாக போலீஸ் விசாரணையில்…
UK Crime: இங்கிலாந்தில் இளைஞர் கொலை வழக்கில், தனது மகன் பயன்படுத்திய கொலை ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றி விசாரணைக்கு இடையூறு செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்