Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முத்துசிவா (21), உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இசக்கிபாண்டியன் (19), உக்கிரன்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த பட்டுசாமி என்பவரின் மகன் இசக்கிபாண்டி என்ற விக்னேஷ் (18), அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, நந்தன்தட்டை, நடுத் தெருவை சேர்ந்த வால சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கிபாண்டி (18) ஆகிய நான்கு பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது மானூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்
Australian Girl Killed in Pakistan: பாகிஸ்தானில் விடுமுறைக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுமி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….
Karur College Student Murder Case : கரூரில் 2016ஆம் ஆண்டு கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம்…
Mayiladuthurai: மயிலாடுதுறையில் சவ ஊர்வலத்தை கடக்க முயன்ற காரை, போதையில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் மறித்து தாக்கியதில் 80 வயது மூதாட்டி உட்பட 5 பேர் காயமடைந்தனர்….
Christian preacher arrested in Tuticorin : கிறிஸ்தவ தேவாலயம் வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்….
Fake doctors arrested: திருப்பத்தூரில் போலி மருத்துவர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்