Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உக்கிரன்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் முத்துசிவா (21), உக்கிரன்கோட்டை, சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இசக்கிபாண்டியன் (19), உக்கிரன்கோட்டை, வடக்கு தெருவை சேர்ந்த பட்டுசாமி என்பவரின் மகன் இசக்கிபாண்டி என்ற விக்னேஷ் (18), அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, நந்தன்தட்டை, நடுத் தெருவை சேர்ந்த வால சுப்பிரமணியன் என்பவரின் மகன் இசக்கிபாண்டி (18) ஆகிய நான்கு பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது மானூர் காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.சிலம்பரசனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் நால்வரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: டி.டி.வி தினகரன் கண்டனம்
Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன….
Coimbatore: கோயம்புத்தூரின் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில், 18 வயது பெண் பொறியியல் மாணவி தனது வகுப்பு சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்டார்….
Govind Pansare murder case: கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருந்த சமீர் கைக்வாட் மராட்டிய மாநிலம் சாங்க்லியில் மரணமடைந்தார்….
Rajasthan: 150 கிலோ வெடிப்பொருள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்