Mythology: படகுகளை திசை மாற்றிய அம்மனின் மூக்குத்தி ரகசியம் தெரியுமா?
Mythology: படகுகளை திசை மாற்றிய அம்மனின் மூக்குத்தி ரகசியம் தெரியுமா?
Published on: April 18, 2025 at 10:46 am
திருவிதாங்கூர் என்ற ஊரில் உள்ள பனையேறும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் ஆவர். அடுத்த குழந்தையும் பெண் குழந்தையாகவே பிறந்தது. இதனால் விரக்தி அடைந்த தொழிலாளி பாம்பு புற்றுக்குள் கையை விட்டார். அப்பொழுது அவர் கையில் மாணிக்க கல் ஒன்று கிடைத்தது. அந்த மாணிக்க கல்லை அவர் மன்னரிடம் வழங்கினார். இதற்காக பொன்னும் பொருளும் பரிசாக கொடுக்கப்பட்டது.
அன்று இரவு மன்னரின் கனவில் ஒரு சிறுமி தோன்றி நீ பெற்ற நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்ய கூடாதா என்று கேட்டு மறைந்தார். கனவில் வந்தது கன்னியாகுமரி பகவதி அம்மன் என்று மன்னருக்கு தெரிய வந்தது. உடனே மன்னர் அந்த நாகரத்தினத்தில் மூக்குத்தி செய்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டார். அந்த மூக்குத்தி கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை விட அதிகமாக ஜொலித்ததால் அந்தப் பகுதியில் வரக்கூடிய படகுகள் திசை மாறின.
இதனால் ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியே தரிசனம் நடைபெறுகிறது. இந்த தளத்தில் தான் தானுமாலையனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நிறுத்தப்பட்டதால் திருமணத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவுகள் மணலாக மாறின. இதற்கு அடையாளமாக இன்றளவும் குமரி கடற்கரையில் வெண்மை போன்ற பல நிறங்களில் மணல்கள் காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க. நெஞ்சை பிளந்த அனுமன்; வியந்து பார்த்த சபை: அன்று நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com