Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் 2024-ன் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு அக். 5ஆம் தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.
90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது, முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டம் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடந்தது.
இந்த நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்கணிப்பாளர்களுடன் பல செய்தி சேனல்கள் தங்கள் கணிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.
அதன்பின்னர், 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் முந்தைய மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் எனக் கூறின. அப்போது, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
Kashmir: ஜம்மு காஷ்மீரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Narendra Modi: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். ஆனால் நேரு தடுத்தார் என பிரதமர் நரேந்திர…
Sonam Wangchuk case: தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்….
Omar Abdullah: “ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு தனது சொந்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது” என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்…
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்