பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. நவ.14 ரிசல்ட்.. யாருக்கு அதிக எம்.எல்.ஏ பலம்? திடீர் கவனம் ஈர்த்த ஆம் ஆத்மி!

Bihar Election 2025 Date: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்.6, 2025) தெரிவித்துள்ளது.

Published on: October 6, 2025 at 5:16 pm

பாட்னா, அக்.6, 2025: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று (திங்கள்கிழமை) பீகார் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை மாலை 4 மணிக்கு மேல் அறிவித்தது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

முன்னதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில், சத் பண்டிகைக்குப் பிறகு உடனடியாக தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடந்தது.

இதையும் படிங்க : லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை.. பிரசாந்த் கிஷோர்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சேர்ந்து பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவித்தனர்.

பீகார் தேர்தல் தேதி

இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, தேர்தலானது நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.

கட்சிகள் கூட்டணி

இதற்கிடையில், இந்தியா மற்றும் என்.டி.ஏ கூட்டணிகளுக்கான இடப் பங்கீடு இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை ஆளுங்கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை அறிவித்தது. கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி பாட்னா, பெகுசராய், தர்பங்கா, கிஷன்கஞ்ச் மற்றும் மோதிஹரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலம்

243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது 131 இடங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸின் மகாபந்தன் 111 இடங்களைக் கொண்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) முகாமில், பாரதிய ஜனதா கட்சி 80 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் (JD(U) 45 இடங்களையும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்சா (HAM(S) 4 இடங்களையும் கொண்டுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரண்டு சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது.

காங்கிரஸின் மகாபந்தன் முகாமில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 77 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 19, சிபிஐ (எம்எல்) 11, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இதையும் படிங்க : ராகுல், சோனியா மீது வழக்கு: பீகாரில் ரயிலை மறித்த காங்கிரஸார்!

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு தடை கோரிக்கை.. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் Parasakthi

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு தடை கோரிக்கை.. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்

Parasakthi: பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது….

அனில் அம்பானியை ஏன் விட்டீங்க? நீதிமன்றத்தை நாடும் வங்கிகள்! Anil Ambani case

அனில் அம்பானியை ஏன் விட்டீங்க? நீதிமன்றத்தை நாடும் வங்கிகள்!

Anil Ambani case: அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிவாரண உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை வங்கிகள் அணுகியுள்ளன….

விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டம்.. 125 வேலை உறுதி.. மத்திய அமைச்சர்! Viksit Bharat G-RAM-G Act

விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டம்.. 125 வேலை உறுதி.. மத்திய

Viksit Bharat G-RAM-G Act: மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் மூலமாக, 125 நாள்கள் வேலை கிராமப்புற மக்களுக்கு உறுதியாக வழங்கப்படும்…

ஆஸி மகளிர் கிரிக்கெட் கேப்டன் திடீர் ஓய்வு.. முழு விவரம்! Alyssa Healy announces retirement

ஆஸி மகளிர் கிரிக்கெட் கேப்டன் திடீர் ஓய்வு.. முழு விவரம்!

Alyssa Healy announces retirement: ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்….

சோமநாதர் சுயமரியாதை அடையாளம்.. அகமதாபாத்தில் 2036-ல் ஒலிம்பிக்.. அமித் ஷா Amit Shah

சோமநாதர் சுயமரியாதை அடையாளம்.. அகமதாபாத்தில் 2036-ல் ஒலிம்பிக்.. அமித் ஷா

Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்….

ஈரானுடன் வணிகமா? 25 சதவீதம் வரி- பொருளாதார தண்டனை.. எச்சரிக்கும் அமெரிக்கா! Donald Trump

ஈரானுடன் வணிகமா? 25 சதவீதம் வரி- பொருளாதார தண்டனை.. எச்சரிக்கும் அமெரிக்கா!

Donald Trump : ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தண்டனை அளிக்கும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com