டியூசன் சென்று திரும்பிய 9 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: பற்றியெரியும் மேற்கு வங்கம்!

West Bengal | டியூசன் சென்று திரும்பிய மாணவி பிணமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

Published on: October 5, 2024 at 5:37 pm

West Bengal | மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று (அக்.5, 2024) 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினர். வெள்ளிக்கிழமை மாலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் போலீசார் “உடனடியாக அவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ஜெய்நகர் பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர், “உள்ளூர் மக்கள் புறக்காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் போலீசார் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், “பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அப்பகுதியில் உள்ள மகிஸ்மரி அவுட்போஸ்டில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர், ஆனால் போலீசார் உடனடியாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், “சிறுமி கொலைக்கு எதிராக பா.ஜ.க.வினர் நீதி கோரி பேரணி நடத்தினார்கள். மேலும், சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மம்தா பானர்ஜி குற்றவாளிகளை பாதுகாக்கிறார். இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க

சென்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு.. இளைஞர் கைது! Chennai Acid Attack

சென்னையில் பெண் மீது ஆசிட் வீச்சு.. இளைஞர் கைது!

Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்….

வள்ளியூர்: குடும்பத் தகராறில் மனைவியை அறிவாளால் தாக்கிய கணவன் கைது Valliyur

வள்ளியூர்: குடும்பத் தகராறில் மனைவியை அறிவாளால் தாக்கிய கணவன் கைது

Valliyur: நெல்லை மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

24 வயது மனைவியை சரமாரிய வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி.. நடந்தது என்ன? Wife Killed in Tirunelveli Bus Stand

24 வயது மனைவியை சரமாரிய வெட்டிக் கொன்ற கூலித் தொழிலாளி.. நடந்தது என்ன?

Wife Killed in Tirunelveli Bus Stand: திருநெல்வேலியில் 24 வயது மனைவியை சந்தேகம் காரணமாக கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்துள்ளார்….

துரத்தி துரத்தி காதல் டார்ச்சர்.. போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்கிரையான ஆசிரியை! Puducherry

துரத்தி துரத்தி காதல் டார்ச்சர்.. போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்கிரையான ஆசிரியை!

Puducherry : புதுச்சேரி காவல் நிலையம் அருகே தீ வைக்கப்பட்ட ஆசிரியை, மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்….

தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொடூர கொலை..6 தனிப்படைகள் அமைப்பு Thoothukudi

தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொடூர கொலை..6 தனிப்படைகள் அமைப்பு

Thoothukudi: தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com