டியூசன் சென்று திரும்பிய 9 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: பற்றியெரியும் மேற்கு வங்கம்!

West Bengal | டியூசன் சென்று திரும்பிய மாணவி பிணமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

Published on: October 5, 2024 at 5:37 pm

West Bengal | மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று (அக்.5, 2024) 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினர். வெள்ளிக்கிழமை மாலை முதல் சிறுமி காணாமல் போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் போலீசார் “உடனடியாக அவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ஜெய்நகர் பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர், “உள்ளூர் மக்கள் புறக்காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் போலீசார் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், “பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அப்பகுதியில் உள்ள மகிஸ்மரி அவுட்போஸ்டில் எஃப்ஐஆர் பதிவு செய்தனர், ஆனால் போலீசார் உடனடியாக புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், “சிறுமி கொலைக்கு எதிராக பா.ஜ.க.வினர் நீதி கோரி பேரணி நடத்தினார்கள். மேலும், சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மம்தா பானர்ஜி குற்றவாளிகளை பாதுகாக்கிறார். இந்த வழக்கில் துரித விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 50 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது 3 foreign passengers arrested for smuggling

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 50 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர்

Bengaluru: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் கடத்தி வந்த வெளிநாட்டு பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்….

‘வங்காளிகள் அனைவரும் இந்தியர்கள்’.. தஸ்லிமாவுக்கு ஜாவேத் அக்தர் பதில்! Taslima Nasreen

‘வங்காளிகள் அனைவரும் இந்தியர்கள்’.. தஸ்லிமாவுக்கு ஜாவேத் அக்தர் பதில்!

Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்….

17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தை- மகன் கைது.. ஆணவ படுகொலையா? Honor Killing in UP

17 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தை- மகன் கைது.. ஆணவ படுகொலையா?

Honor Killing in UP: உத்தரப் பிரதேசத்தில் 15 வயதான மாணவியை தந்தை மற்றும் மகன் ஆகியோர் சுட்டு ஆணவ படுகொலை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன….

டிராபிக் பெண் எஸ்.ஐ மீது அவதூறு.. இளைஞர் மீது வழக்குப்பதிவு Bengaluru

டிராபிக் பெண் எஸ்.ஐ மீது அவதூறு.. இளைஞர் மீது வழக்குப்பதிவு

Bengaluru: பெங்களூருவில் பெண் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளருக்கு (பிஎஸ்ஐ) எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்துக்களை பதிவிட்ட இருசக்கர வாகன ஓட்டி மீது கர்நாடக காவல்துறை…

மேற்கு வங்கம்; ரயில் மோதி குழந்தை, பெண் உள்பட மூவர் உயிரிழப்பு! West Bengal

மேற்கு வங்கம்; ரயில் மோதி குழந்தை, பெண் உள்பட மூவர் உயிரிழப்பு!

West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com