அமெரிக்காவில் படிப்பு.. இந்தியாவை தேர்வு செய்தது ஏன்? ராதிகா மெர்சென்ட்

Radhika Ambani : அமெரிக்காவில் படித்த போதிலும், இந்தியாவை தேர்வு செய்தது ஏன் என மனம் திறந்து பேசியுள்ளார் ராதிகா மெர்ச்சென்ட்.

Published on: June 11, 2026 at 8:41 pm

புதுடெல்லி, ஜூன் 11, 2026: முகேஷ் அம்பானியின் இளைய மருமகளும் ஆனந்த் அம்பானியின் மனைவியுமான ராதிகா அம்பானி, அமெரிக்காவில் கல்வி பயின்ற பிறகு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை வெளிப்படையாக விளக்கியுள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்ற அவர், அப்போதைய அமெரிக்க சூழல் குழப்பமாக இருந்ததையும், அதே நேரத்தில் இந்தியா வலுவான வளர்ச்சி பாதையில் இருந்ததையும் குறிப்பிட்டார்.

ராதிகா, “அப்போதுதான் டிரம்ப் அதிபராகிக்கொண்டிருந்தார். தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்கா குழப்பமான நிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவில் பாஜக மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சிக்கு வந்திருந்தது. ஆதார், யுபிஐ, ஜியோ போன்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது” என்று தெரிவித்தார். இதுவே இந்தியா திரும்பும் முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் கூறினார்.

மேலும், அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனுபவம் தனது முடிவை மாற்றியமைத்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார். “மேடிசன் ஸ்கொயர் பூங்காவில் நடந்த அந்த நிகழ்வில் பங்கேற்றபோது, இந்தியாவின் எதிர்காலம் மிகப்பெரிய வாய்ப்புகளால் நிரம்பியதாகத் தோன்றியது. அப்போது இந்தியா 8.5% வளர்ச்சியைக் கொண்டிருந்தது, ஆனால் அமெரிக்கா 2-3% வளர்ச்சியையே கொண்டிருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

ராதிகா அம்பானியின் இந்தக் கருத்துக்கள், இந்தியாவின் வளர்ச்சி பாதை மற்றும் அரசியல் நிலைத்தன்மை, வெளிநாட்டில் கல்வி பயின்ற இளைஞர்களை நாட்டிற்கு திரும்பச் செய்யும் முக்கிய காரணிகளாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

இதையும் படிங்க : பெண்களே 35 வயது ஆகிட்டா.. ஹார்மோன் மாற்றம்.. நடிகை அபிராமி கொடுத்த அட்வைஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com