இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

AR Rahman: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7, 2026) நடைபெறுகிறது.

Published on: June 6, 2026 at 7:24 pm

புதுடெல்லி, ஜூன் 6, 2026: மெயின் வாபஸ் ஆவுங்கா (Main Vaapas Aaunga) திரைப்பட வெளியீட்டிற்கு முன்னதாக, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ஏ.ஆர். ரஹ்மான், பஞ்சாபில் உள்ள அட்டாரி எல்லையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளார். ‘ஜெய் ஹோ – வீரர்களுக்கு ஓர் அஞ்சலி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஜே.சி.பி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இயக்குனர் இம்தியாஸ் அலி, நடிகர் வேதாங் ரெய்னா, பாடகர்கள் மோஹித் சவுகான், பூஜா திவாரி, நர்கிஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர். தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மெயின் வாபஸ் ஆவுங்கா திரைப்படம், இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட காதலர்களின் கதையை விவரிக்கிறது. வேதாங் ரெய்னா மற்றும் ஷர்வரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தில்ஜித் தோசாஞ்ச் மற்றும் நசிருதீன் ஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இம்தியாஸ் அலி இயக்கியுள்ள இப்படம், 1947 பிரிவினையின் பின்னணியில் காதலின் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

இம்தியாஸ் அலி, “நாடு பிரிவினை குறித்த ஒரு திரைப்படத்தை உருவாக்க, புதிதாகவும் தனித்துவமாகவும் சொல்ல வேண்டியதுண்டு. வெறும் சம்பவத்தை விவரிப்பதற்காக அல்ல, அந்தக் காலத்தில் எஞ்சியிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக இந்தக் கதை உருவாக்கப்பட்டது” எனக் கூறினார். இப்படம் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க : பிரபல சீன நடிகர் 33 வயதில் மரணம்.. என்ன காரணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com