செல்வ மகள் சேமிப்பு திட்டம்: ஒரு வங்கியில் இருந்து கணக்கை மற்றொரு பேங்கிற்கு மாற்றுவது எப்படி?

Sukanya Samriddhi Yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு) திட்டத்தின் கணக்கை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி என்பது தெரியுமா?

Published on: October 3, 2024 at 6:09 pm

Sukanya Samriddhi Yojana | சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறந்த திட்டத்தில் ஒன்று ஆகும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலங்களில் துவங்கலாம்.

எஸ்.எஸ்.ஒய். திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ரூ. 250 முதல் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் ஆண்டிற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தை 21 வயதை அடையும்போது இத்திட்டம் முதிர்ச்சியடையும்.

இத்திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக பெற்றோருக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது. செல்வ மகள் சேமிப்பு திட்டம் துவங்கி பணி இட மாற்றம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் அந்த வங்கி கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற விரும்பினால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • எஸ்.எஸ்.ஒய். திட்ட கணக்கை ஆன்லைனில் தொடங்கவோ அல்லது அக்கவுன்டை மாற்றவோ வசதி இல்லை. அதனால் குறிப்பிட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு கணக்கு தொடங்கிய கேஒய்சி ஆவணங்களுடன் செல்ல வேண்டும். கணக்கை துவங்கிய பிறகு ஆன்லைனில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
  • வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் சென்றதும் நீங்கள் கணக்கை மாற்ற வேண்டியது குறித்துபேசி அதற்காக படிவத்தை பெற வேண்டும். பின்னர் அதை கவனமாக நிரப்ப வேண்டும். படிவத்தில், எஸ்.எஸ்.ஒய். கணக்கை மாற்ற விரும்பும் புதிய வங்கி அல்லது தபால் நிலையத்தின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடப்பட வேண்டும்.
  • வங்கி அல்லது தபால் அலுவலகம் படிவத்தை சரிபார்த்து, பரிமாற்ற செயல்முறையைத் தொடங்கும். பின்னர், அதற்கான ஆவணங்களைமாற்ற வேண்டிய வங்கி அல்லது தபால் கிளைக்கு அனுப்பவும். கணக்கு தொடர்பான ஆவணங்கள் புதிய வங்கிக்கு வந்தவுடன், அங்கு உங்கள் கணக்கைத் தொடங்கும் செயல்முறை தொடங்கப்படும்.
  • புதிய வங்கியில், எஸ்.எஸ்.ஒய். கணக்கு திறப்பு படிவத்தை நிரப்ப வேண்டும் மற்றும் கே.ஒய்.சி ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய வங்கியில் மீண்டும் கணக்கு திறக்கப்படும். அங்கு கணக்கு திறக்கப்பட்டதும் தொடர்ந்து முதலீடு செயல்முறையை துவங்கலாம்.

இதையும் படிங்க :

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com