PM Kisan 19th Installment: பிரதம மந்திரி கிசான் 19வது தவணை எப்போது விடுவிக்கப்படும். இது விவசாயிகளுக்கு நல்ல செய்தி ஆகும். அந்த வகையில், இந்த நாளில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும்.
PM Kisan 19th Installment: பிரதம மந்திரி கிசான் 19வது தவணை எப்போது விடுவிக்கப்படும். இது விவசாயிகளுக்கு நல்ல செய்தி ஆகும். அந்த வகையில், இந்த நாளில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும்.
Published on: January 28, 2025 at 5:55 pm
பி.எம் கிஷான் 19வது விடுவிப்பு தேதி: பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 19வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ் இங்குள்ளது. அதாவது, பிப்ரவரி மாதம், நீங்கள் 19வது தவணைக்கான தொகையைப் பெறப் போகிறீர்கள். இந்த நிலையில், இந்த தவணை எப்போது வெளியிடப்படும் என்பது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.
மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இதுவரை, 18 தவணைகளுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது, விவசாயிகள் 19வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், 19வது தவணை வரவு வைக்கப்படுவது எப்போது தெரியுமா?
இது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்தத் தகவலில் 19வது தவணை பிப்.24ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, பீகாருக்கு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : National Girl Child Day 2025: ரூ.250ல் ஸ்டார்ட் பண்ணுங்க, ரூ.5 லட்சம் கியாரண்டி ரிட்டன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com