Milk Bikis Thirukkural Challenge : தமிழ்நாட்டில் பிரிட்டானியா திருக்குறள் சேலஞ்ச் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பங்கேற்பது எப்படி? என்பது தொடர்பான முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
Milk Bikis Thirukkural Challenge : தமிழ்நாட்டில் பிரிட்டானியா திருக்குறள் சேலஞ்ச் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பங்கேற்பது எப்படி? என்பது தொடர்பான முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

Published on: June 3, 2026 at 10:35 pm
Updated on: June 3, 2026 at 10:36 pm
சென்னை, ஜூன் 3, 2026: பிரிட்டானியா மில்க் பிக்கிஸ், தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக குழந்தைகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது. மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, நிறுவனம் ‘திருக்குறள் சேலஞ்ச்’ என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகள் திருக்குறளை இன்டராக்டிவான அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளவும், ரசிக்கவும் உதவுகிறது.
திருவள்ளுவர் எழுதிய 1,330 குறள்கள் கொண்ட திருக்குறள், அன்றாட வாழ்க்கை, மனித உறவுகள், கற்றல், தலைமைத்துவம் மற்றும் வாழ்வியல் நன்மதிப்புகள் குறித்த காலத்தால் அழியாத பாடங்களை வழங்குகிறது. 2,000 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக பரவியுள்ள இந்த நூல், இன்றளவும் வாழ்க்கைக்கு பொருத்தமாக உள்ளது.
இந்த முன்னெடுப்பு, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கப்பட்டது. இதில் அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் கலந்து கொண்டு, திருக்குறள் எவ்வாறு இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பொருத்தமாக உள்ளது என்பதை விவாதித்தனர். அவர்கள், குழந்தைகள் திருக்குறளை கற்றுக்கொள்ளும் முறையை புதுமையாகவும் ஈடுபாட்டுடன் மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த கலந்துரையாடலில் டாக்டர் G. ஞானசம்பந்தன், லிடியன் நாதஸ்வரம், சுகி சிவம், பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள், கதைசொல்லல், இசை, அன்றாட உரையாடல்கள் மற்றும் இன்டராக்டிவ் அனுபவங்கள் மூலம் குழந்தைகளிடம் திருக்குறளை எவ்வாறு கொண்டு சேர்க்கலாம் என்பதைப் பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் (மார்கெட்டிங்) அர்ச்சனா பலராமன், “மில்க் பிக்கிஸ், தமிழகத்துடன் ஒரு சிறப்பு பிணைப்பைப் பகிர்ந்து வருகிறது. திருக்குறள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான பொதுமறையாகும். இந்த ‘திருக்குறள் சேலஞ்ச்’ மூலம், குழந்தைகள் திருக்குறளை சுவாரஸ்யமான அனுபவமாக கற்றுக்கொள்ள உதவ விரும்புகிறோம்” எனக் கூறினார்.
டேலண்டட் நிறுவனத்தின் பிராண்ட் ஸ்ட்ராடஜி அலுவலர் ரியா சர்மா, “திருக்குறள் என்பது நமது வாழ்க்கைக்கான உண்மையான வழிகாட்டி. மில்க் பிக்கிஸ் பிரச்சாரத்தின் மூலம், புதிய தலைமுறைக்கு திருக்குறள் எவ்வாறு பொருத்தமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மில்க் பிக்கிஸ் பேக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஸ்கட்டுகளில் திருக்குறளின் சொற்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒருங்கிணைத்து மூன்று குறள்களை உருவாக்கலாம்; அவை நட்பு, கற்றல், விடாமுயற்சி போன்ற கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருக்கும். மேலும், ஒரு பிரத்யேக மைக்ரோசைட் மூலம் நுகர்வோர் சொற்களை சேகரித்து, குறளை நிறைவு செய்து பரிசுகளை வெல்லலாம்.
பங்கேற்பது எப்படி?

இந்த முயற்சி, திருக்குறளை இளைய தலைமுறைக்கு புதுமையான முறையில் கொண்டு சேர்க்கும் ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சந்தை முதலீடு.. மருந்துத் துறை எப்படி? டாப் 5 நிறுவனங்கள்.. ஓர் பார்வை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com