Gun shooting in Pakistan | பாகிஸ்தானின் தென்மேற்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 20 சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமுற்றனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சமீபத்திய தாக்குதல் தலைநகரில் ஒரு பெரிய பாதுகாப்பு உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் வியாழக்கிழமை இரவு டுகி மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் உள்ள விடுதிக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
பலுசிஸ்தானின் பஷ்டூன் மொழி பேசும் மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைக்கும் சட்டவிரோத பலூச் விடுதலை இராணுவத்தின் மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க
Rashid Khan: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் தாக்குதல் வேதனையளிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்….
Pakistan Airstrike: ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 400 உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பாகிஸ்தானை இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது….
Pakistan Airstrike: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது….
Pakistan: பாகிஸ்தான் பெண்ணின் பௌலிங் வீடியோ வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பதிவேற்றியவர் கடத்தப்பட்டார். ஏன்?…
Pakistan: காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்