Congress corporator shot dead | உஜ்ஜெயின்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில் இன்று (அக்.11, 2024) அதிகாலை 5 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஹாஜி கலீம் கான் (60) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைதுசெய்தனர். முதல்கட்ட விசாரணையில், நிலத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் மேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திவருகிறார்கள். இதற்கிடையில் நிலத்தகராறு விவகாரத்தில் கான் மீது ஏற்கனவே குடும்ப உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் உஜ்ஜெயினி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீல்கங்கா காவல் நிலைய போலீசார் வழக்கு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க
Tirunelveli: திருநெல்வேலியில் கல்லூரி பேராசிரியர் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க நடந்த முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது….
Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்….
Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, அஸ்வத்தாமன் வெளிநாடு தப்பிச் சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்….
Sathankulam : கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ) வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்த முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன….
Hosur: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றத்தில் பால் வியாபாரி கைது செய்யப்பட்டார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்