Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Congress corporator shot dead | காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்….
Jharkhand | டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்….
ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது….
Mallikarjun Kharge | நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் சாக மாட்டேன் என ஜம்மு காஷ்மீல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்….
Jammu and Kashmir | Congress | ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்