Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Kerala CM Decision : கேரளத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது….
Kerala Election 2026: கேரளத்தில் முதலமைச்சர் பதவியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ரேஸில் வேணுகோபால் முன்னிலை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Kerala Election 2026 : கேரளத்தில் முதல் முறையாக பா.ஜ.க 3 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்க…
DMK Alliance : தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்….
Mallikarjun kharge: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடும்; கேரளாவில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அணி ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை சுட்டிக் காட்டி மல்லிகார்ஜுன்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்