எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து வெளியேறலாம்.. மீசையை முறுக்கும் திருமாவளவன்!

Political twist from Thirumavalavan: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் நாங்கள் வெளியேறலாம் என்கிறார் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.

Published on: June 14, 2026 at 5:12 pm

சென்னை, ஜூன் 14, 2026: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். “நாங்கள் அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதால், கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை. எந்த நேரத்திலும் கூட்டணியில் இருந்து வெளியேறலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் ஏன்? திருமா விளக்கம்

அவர் மேலும், “இன்னும் த.வெ.க.வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை. இடதுசாரிகளும் வெளியே நிற்கின்றனர். திருமாவளவனும் வெளியே நிற்கிறார் என்றால் எந்த நேரத்திலும் நமக்கு பிரச்னை” எனக் கூறினார். அதனால்தான் இறுதி முடிவாக நாங்கள் அமைச்சரவையில் சேர்வது என முடிவெடுத்தோம்” என்றார்.

எந்த நேரத்திலும்..

தொடர்ந்து, “தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் நாங்கள் வெளியே வரலாம், நாங்கள் அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதால், கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை. இன்னும் த.வெ.க.வும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : எடப்பாடி பழனிசாமி வெற்றிக்கு பா.ம.கதான் காரணம்.. சி.வி சண்முகம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com