உத்தரப் பிரதேசத்தில் தங்கம், 1.5 கிலோ வெள்ளி திருட்டு.. நேபாளிகள் சிக்கியது எப்படி?

Gold theft shock in Hyderabad : ஹைதராபாத்தில் தங்கம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி திருடிய வழக்கில், நேபாளிகள் மூன்று பேர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: June 10, 2026 at 1:28 pm

லக்னோ, ஜூன் 10, 2026: உத்தரப் பிரதேசத்தில் உள்ள கச்சிபௌலி, ஹில் ரிட்ஜ் வில்லாஸில் நடந்த பெரும் திருட்டு சம்பவத்தில், மூன்று நேபாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கமல் ஷஷி, அவரது மனைவி விமல் ஷஹி மற்றும் கல்பனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், மேலும், மாற்று ஆணை மூலம் ஹைதராபாதுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். ஜூன் 7 அன்று, ஒரு வயதான தம்பதியினர் வீட்டில் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. தொடர்ந்து, லாக்கரில் இருந்த 1.5 கிலோ வெள்ளியும் மாயமானது.

இது குறித்த புகாரின் அடிப்படையில், ஜூன் 9 அன்று, உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள உதம்பூரில் உள்ள கச்சிபௌலி காவல் நிலையத்தின் துப்பறியும் ஆய்வாளர் நரேஷ் தலைமையிலான குழுவினர், உள்ளூர் காவல்துறையின் உதவியுடன் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சேதமின்றி மீட்கப்பட்டன. விசாரணையில், லாக்கருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சாவியைப் பயன்படுத்தி நகைகளை எடுத்ததாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க : மம்தா பானர்ஜி கட்சிக்கு இரண்டாவது அதிர்ச்சி.. பெண் எம்.பி திடீர் ராஜினாமா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com