NEET Row : நீட்-யுஜி 2026 தேர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
NEET Row : நீட்-யுஜி 2026 தேர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

Published on: July 25, 2026 at 5:46 pm
புதுடெல்லி, ஜூலை 25 2026: நீட்-யுஜி 2026 தேர்வைச் சுற்றியுள்ள சர்ச்சை மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் இன்று சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்கள் சந்தித்து வரும் தற்போதைய சூழல் தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது ராஜினாமா முடிவு தனிப்பட்ட கௌரவம் சார்ந்தது அல்ல என்றும், டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாணவர் போராட்டங்களை கருத்தில் கொண்டு, தேச விரோத சக்திகள் இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளாமல் தடுக்கவும், எந்த மாணவரின் எதிர்காலமும் சட்டச் சிக்கல்களில் சிக்காமல் இருக்கவும் இந்த முடிவை எடுத்ததாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மேலும், தனது பணிக்காலம் முழுவதும் வழிகாட்டுதலும் நம்பிக்கையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நீட்-யுஜி 2026 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு முழுமையாக கணினி வழி தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும் என்றும், மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் ஜூன் 21, 2026 அன்று மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 16 அன்று வெளியிடப்பட்ட நீட்-யுஜி 2026 தேர்வு முடிவில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பல திறமையான மாணவர்கள் வெற்றி பெற்றதாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், பொறுப்பான பதவிகளில் உள்ள சிலர் மாணவர்களை தவறாக வழிநடத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், அதுவே தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வர் விஜயுடன் பேச்சு? டி.கே. சிவகுமார் சூசக பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com