Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.
Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.

Published on: May 2, 2026 at 4:48 pm
தூத்துக்குடி, மே 2, 2026: திருச்செந்தூரில் இன்று காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. இதனால், பாசி படர்ந்த பாறைகள் வெளிப்பட்டன; பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை, பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் கடல் திடீரென 70 அடி தூரம் வரை உள்வாங்கியதால், வழக்கமாக நீரில் மூழ்கியிருக்கும் பாசி படர்ந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளிப்பட்டன.
திருச்செந்தூரைப் பொறுத்தமட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், திடீர் கடல் உள்வாங்கல் காரணமாக, பக்தர்கள் அச்சத்துடன் இருந்தனர்.
இதற்கிடையில், சிலர் ஆபத்து அறியாமல் வெளிப்பட்ட பாறைகளின் அருகே நீராட முயன்றதால், காயம் ஏற்படும் அபாயம் இருந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக அறிவுறுத்தி, பக்தர்கள் பாதுகாப்பான பகுதிகளில் மட்டுமே நீராடுமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும், கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com