Vijay Prays at Tiruchendur Murugan Temple : தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Vijay Prays at Tiruchendur Murugan Temple : தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Published on: April 28, 2026 at 10:48 am
Updated on: April 28, 2026 at 10:58 am
திருச்செந்தூர், ஏப் 28, 2026: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக இன்று அதிகாலை திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு த.வெ.க. தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், ‘வெற்றி வேல்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கடற்கரைக்கும் சென்று வழிபாடு மேற்கொண்டார்.
விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடாக திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அவரது இந்த கோவில் தரிசனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : விஜய்க்கு எதிரான மனு.. சென்னை ஐகோர்ட் தள்ளுபடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com