தி.மு.க.வை திருப்திப்படுத்த.. அரைவேக்காடு.. திருமாவை கண்டித்த டி.டி.வி

Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல். திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: January 31, 2026 at 11:15 pm

சென்னை, ஜன.31, 2026: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் டி.டி.வி தினகரன் சனிக்கிழமை (ஜன.31, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா?” என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கையில் மேலும் டி.டி.வி தினகரன், “தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.

எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸ் கொடூரக் கொலை!

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை! Tiruchendur sea

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

Tiruchendur : திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) காலை கடல் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது….

91 வயது முதியவர் மரணம்.. மகனுடன் தீக்குளிக்க முயன்ற வக்கீல்.. தூத்துக்குடியில் பரபரப்பு Lawyer Son Attempt Self Immolation in Property Row

91 வயது முதியவர் மரணம்.. மகனுடன் தீக்குளிக்க முயன்ற வக்கீல்.. தூத்துக்குடியில் பரபரப்பு

Property Row : தூத்துக்குடியில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்….

எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், தி.மு.க கூட்டணி வெற்றிப் பெறும்.. தொல். திருமாவளவன்! Thol Thirumavalavan

எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், தி.மு.க கூட்டணி வெற்றிப் பெறும்.. தொல். திருமாவளவன்!

Thol Thirumavalavan : எப்படி பார்த்தாலும், தி.மு.க.கூட்டணிதான் வெற்றி பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்….

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்! IMD Issues Rain Alert

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்!

IMD Rain Alert : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்று (மே 2, 2026) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு…

நீட் தேர்வு மன ஆலோசனை.. நட்புடன் உங்களோடு.. முழு விவரம் TN Govt Launches 24 7 NEET Counselling Helpline

நீட் தேர்வு மன ஆலோசனை.. நட்புடன் உங்களோடு.. முழு விவரம்

Nadpudan Ungalode Helpline for NEET : நீட் தேர்வு மன ஆலோசனை திட்டமான நட்புடன் உங்களோடு தொடங்கப்பட்டுள்ளது….

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி செயலாளர்.. ஜெயஸ்ரீ ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு.. யார் இவர்? Jayashree Muralidharan

ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி செயலாளர்.. ஜெயஸ்ரீ ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு.. யார் இவர்?

Jayashree Muralidharan: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பழனிசாமியின் செயலராக பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com