சென்னை, ஜன.31, 2026: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் டி.டி.வி தினகரன் சனிக்கிழமை (ஜன.31, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா?” என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கையில் மேலும் டி.டி.வி தினகரன், “தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.
எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸ் கொடூரக் கொலை!
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும்…
TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை…
Tuticorin Bus Accident : தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், வேன் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில்…
Woman Killed in namakkal: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் 7…
Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி வி. மோகனா வழக்கில் இருந்து விலகியதால்…
TN–Karnataka CMs to Meet : தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் சந்திப்பு நேரம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்