செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!

Senthil Balaji: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி வி. மோகனா வழக்கில் இருந்து விலகியதால் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவில்லை.

Published on: July 31, 2026 at 1:13 pm

சென்னை, ஜூலை 31 2026: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க இருந்தது.

இருப்பினும், இவ்வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி வி. மோகனா விசாரணையிலிருந்து தாமே விலகுவதாக (Recuse) அறிவித்ததை அடுத்து, இந்த மனு மீதான விசாரணை நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டாஸ்மாக் நிர்வாக முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) புதிதாகப் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் (FIR) வழக்கில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார்.

டாஸ்மாக் கொள்முதல் மற்றும் நிர்வாக விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு எதிராகப் புதிய வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புதிய எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் கைது நடவடிக்கை பாயலாம் என்ற சூழலில், அதற்கு எதிராகப் பாதுகாப்பு கோரியே அவர் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

தற்போது நீதிபதி வி. மோகனா இந்த வழக்கை விசாரிக்காமல் விலகியுள்ள நிலையில், இந்த முன்ஜாமீன் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும் பொருட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. புதிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்ட பின்னரே, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

இதையும் படிங்க : மேகதாது விரிவான திட்ட அறிக்கை.. திருப்பி அனுப்பிய மத்திய அரசு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com