பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. நவ.14 ரிசல்ட்.. யாருக்கு அதிக எம்.எல்.ஏ பலம்? திடீர் கவனம் ஈர்த்த ஆம் ஆத்மி!

Bihar Election 2025 Date: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்.6, 2025) தெரிவித்துள்ளது.

Published on: October 6, 2025 at 5:16 pm

பாட்னா, அக்.6, 2025: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று (திங்கள்கிழமை) பீகார் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை மாலை 4 மணிக்கு மேல் அறிவித்தது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

முன்னதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில், சத் பண்டிகைக்குப் பிறகு உடனடியாக தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடந்தது.

இதையும் படிங்க : லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை.. பிரசாந்த் கிஷோர்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சேர்ந்து பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவித்தனர்.

பீகார் தேர்தல் தேதி

இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, தேர்தலானது நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.

கட்சிகள் கூட்டணி

இதற்கிடையில், இந்தியா மற்றும் என்.டி.ஏ கூட்டணிகளுக்கான இடப் பங்கீடு இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை ஆளுங்கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை அறிவித்தது. கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி பாட்னா, பெகுசராய், தர்பங்கா, கிஷன்கஞ்ச் மற்றும் மோதிஹரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலம்

243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது 131 இடங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸின் மகாபந்தன் 111 இடங்களைக் கொண்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) முகாமில், பாரதிய ஜனதா கட்சி 80 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் (JD(U) 45 இடங்களையும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்சா (HAM(S) 4 இடங்களையும் கொண்டுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரண்டு சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது.

காங்கிரஸின் மகாபந்தன் முகாமில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 77 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 19, சிபிஐ (எம்எல்) 11, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இதையும் படிங்க : ராகுல், சோனியா மீது வழக்கு: பீகாரில் ரயிலை மறித்த காங்கிரஸார்!

Tamil News Updates Feb 28 2026: பிரதமர் மோடி நாளை மதுரை வருகை.. ட்ரோன்கள் பறக்கத் தடை Prime Minister Narendra Modi

Tamil News Updates Feb 28 2026: பிரதமர் மோடி நாளை மதுரை வருகை..

Tamil News Updates January 28 2026: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம்.. ரூ.1 கோடி முதல் பரிசு.. யார் அந்த அதிர்ஷ்டசாலி? Kerala Lottery Result Today

கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம்.. ரூ.1 கோடி முதல் பரிசு.. யார் அந்த

Suvarna Keralam SK 42 : கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது….

இந்தியா வந்தார் கனடா பிரதமர்.. திங்கள்கிழமை மோடியுடன் சந்திப்பு Mark Carney India Visit

இந்தியா வந்தார் கனடா பிரதமர்.. திங்கள்கிழமை மோடியுடன் சந்திப்பு

Mark Carney India Visit: கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை மும்பைக்கு வந்தடைந்தார். இது கார்னியின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்….

பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்! Defence Analyst Maroof Raza Passes Away

பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Maroof Raza Passes Away : பாதுகாப்பு ஆய்வாளர் மரூஃப் ரஸா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்….

டி-20 உலகக் கோப்பை.. இங்கிலாந்து, நியூசிலாந்து இன்று மோதல்! ICC Men’s T20 World Cup

டி-20 உலகக் கோப்பை.. இங்கிலாந்து, நியூசிலாந்து இன்று மோதல்!

ICC Men’s T20 World Cup: டி-20 உலகக் கோப்பை இன்றைய கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன….

மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி Earthquake in West Bengal

மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி

Earthquake in West Bengal: மேற்கு வங்கத்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்தனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com