பெங்களூரு, ஆக.19 2025: கர்நாடகா மாநிலத்தின் தாவங்கேரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடித்த 4 வயதான சிறுமி, செவ்வாய்க்கிழமை (ஆக.19 2025) பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கடுமையான ரேபிஸ் நோய் பாதிப்புகள் இருந்துள்ளன.
முன்னதாக, கதீரா பானு பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அவளைக் கடித்து குதறிவிட்டது.
அந்த நாய் அவளது முகத்தையும் உடலின் பிற பாகங்களையும் கடித்து இருந்தது. இதில் சிறமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவளை அவளது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாய் கடித்தால் ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Veeramani’s Warning : “கரப்பான்பூச்சி ஜனதா கொஞ்சகாலம் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்….
Egg Price Hike : நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு கண்டுள்ளது. புதிய விலையை பார்க்கலாம்….
Auto Fare Hike Demand : “ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்து உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்…
Alandur Harassment Case : சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத்…
Anbumani Ramadoss: “டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்….
CM Vijay Prays at Kollur Temple: முதலமைச்சர் விஜய், தனது 3 நாள் டெல்லி பயணைத்தை முடித்துவிட்டு கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் வழிபாடு நடத்தினார்….