Japan | ஜப்பானிய விமான நிலையத்தில் புதையுண்டு கிடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (செப்.2,2024) வெடித்தது.
இதனால், ஒரு ஓடுபாதையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகில் விமானம் எதுவும் இல்லை” என்று நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில், 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. அதன் திடீர் வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், டாக்ஸிவேயில் சுமார் 7 மீட்டர் (கெஜம்) விட்டமும் 1 மீட்டர் (3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டியது.
இது குறித்து, தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், “புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி விமான நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்சிவே சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழன் காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன” என்றார். மியாசாகி விமான நிலையம் 1943 இல் முன்னாள் இம்பீரியல் ஜப்பானிய கடற்படை விமானப் பயிற்சித் துறையாகக் கட்டப்பட்டது.
இது கடந்த காலத்தில் மிகப்பெரிய போர் விமான இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் வீசப்பட்ட வெடிக்காத பல குண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரினால் வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் குண்டுகள் ஜப்பானைச் சுற்றி புதைந்து கிடக்கின்றன, சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களின்போது தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Annamalai : திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.பி பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக, அண்ணாமலை வாக்கு திரட்டினார்….
Assembly Election 2026: ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிக் கனி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பிரதான போட்டி தி.மு.க.வின்…
G V Prakash Kumar : இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்ட ஜி.வி பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்….
Gold price in Chennai today : தங்கம் விலை இன்று (ஏப்.15, 2026) அதிரடியாக உயர்வை கண்டது….
Kerala Lottery Result Today : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல்-48 குலுக்கல் முடிவுகள் இன்று (ஏப்.15, 2026) மாலை 3 மணிக்கு வெளியானது….
Trisha : நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது சென்னை இல்லத்தில் குண்டு மிரட்டல் பொய்யான தகவலை போலீசார் விசாரித்த பின்னரும், கவலைப்படாமல் பதிவுகள் வெளியிட்டார்…
Iran Envoy in India: கடுமையான காலங்களில் ஆதரவு அளித்ததற்காக இந்தியாவுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது….
Air Strike in Nigeria : நைஜீரியாவில் தவறான வான்படை தாக்குதலால் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….
Trump Warns Iran : ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டத் தவறினால், ஒரே இரவில் ஈரானை அழித்துவிடுவோம் என்று…
Indian Uber Eats Driver: இங்கிலாந்து நாட்டில் உபர் ஈட்ஸ் டெலிவரி டிரைவராக வேலை பார்த்த இந்தியர், வாடிக்கையாளரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறைக்குத் தள்ளப்பட்டுள்ளார்….
Iran America war: 2 அல்லது 3 வாரத்தில் ஈரான் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்