Japan | ஜப்பானிய விமான நிலையத்தில் புதையுண்டு கிடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (செப்.2,2024) வெடித்தது.
இதனால், ஒரு ஓடுபாதையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகில் விமானம் எதுவும் இல்லை” என்று நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில், 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. அதன் திடீர் வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், டாக்ஸிவேயில் சுமார் 7 மீட்டர் (கெஜம்) விட்டமும் 1 மீட்டர் (3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டியது.
இது குறித்து, தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், “புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி விமான நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்சிவே சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழன் காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன” என்றார். மியாசாகி விமான நிலையம் 1943 இல் முன்னாள் இம்பீரியல் ஜப்பானிய கடற்படை விமானப் பயிற்சித் துறையாகக் கட்டப்பட்டது.
இது கடந்த காலத்தில் மிகப்பெரிய போர் விமான இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் வீசப்பட்ட வெடிக்காத பல குண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரினால் வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் குண்டுகள் ஜப்பானைச் சுற்றி புதைந்து கிடக்கின்றன, சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களின்போது தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Subhash Chandra insolvency: சுபாஷ் சந்திராவின் ரூ.6.25 கோடி தீர்வு திட்டம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) முன் கடனாளர்களின் வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது….
Amitabh Bachchan on Nepal Floods : நேபாள நாட்டின் வெள்ள காட்சிகளை பார்க்க முடியவில்லை; கடும் வேதனையை கொடுக்கின்றன என ஹாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்….
Naveen Patnaik vs Mining Law : மத்திய அரசு கொண்டுவந்துள்ள கனிமவள திருத்த சட்டம் ஒடிசா மாநிலத்தில் ஆண்டுக்கு ரூபாய் 12000 கோடி வரையிலான வருவாய்…
Pink Ribbon Global Launch : புதுடெல்லியில் உள்ள இந்திய கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், இந்தியா டர்ன்ஸ் பிங்க் மற்றும் பிங்க் ரிப்பன் இன்டர்நேஷனல் இணைந்து “பிங்க்…
Vijay vs Rahul: PM Race? : யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் ஆனால் 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சியின்…
Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்….
Nepal floods : நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உலகை அச்சுறுத்தி உள்ளது; இந்த திடீர் வெள்ளப்பெருக்கு என்ன காரணம்?…
Jaishankar Meets Putin: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்; அப்போது, கூடங்குளம் அணு உலை ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பான பேச்சுக்கள்…
Natalie Harp role;அமெரிக்க அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய உதவியாளரான நடாலி ஹார்ப்….
Israel: 5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் படுகொலை தொடர்பான தகவல்கள் வெளியாகி தற்போது உலக நாடுகளை கலங்கடிக்க செய்துள்ளன….
Donald Trump: வெள்ளை மாளிகையின் அடுத்த பத்திரிகை செய்தியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளில் ஏற்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்