Japan | ஜப்பானிய விமான நிலையத்தில் புதையுண்டு கிடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (செப்.2,2024) வெடித்தது.
இதனால், ஒரு ஓடுபாதையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகில் விமானம் எதுவும் இல்லை” என்று நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில், 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. அதன் திடீர் வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், டாக்ஸிவேயில் சுமார் 7 மீட்டர் (கெஜம்) விட்டமும் 1 மீட்டர் (3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டியது.
இது குறித்து, தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், “புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி விமான நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்சிவே சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழன் காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன” என்றார். மியாசாகி விமான நிலையம் 1943 இல் முன்னாள் இம்பீரியல் ஜப்பானிய கடற்படை விமானப் பயிற்சித் துறையாகக் கட்டப்பட்டது.
இது கடந்த காலத்தில் மிகப்பெரிய போர் விமான இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் வீசப்பட்ட வெடிக்காத பல குண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரினால் வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் குண்டுகள் ஜப்பானைச் சுற்றி புதைந்து கிடக்கின்றன, சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களின்போது தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூலை 4, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Anbumani Ramadoss: இது தமிழ்நாடா… இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என…
Gold rate today in chennai: தங்கத்தின் விலையில் இன்று (ஜூலை 3 2025) அதிரடி உயர்வு ஏற்பட்டது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை…
Small savings scheme rates : பி.பி.எஃப், எஸ்.எஸ்.ஒய் (சுகன்ய சம்ரித்தி யோஜனா), எஸ்.சி.எஸ்.எஸ் (மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்), என்.எஸ்.சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) உள்ளிட்ட…
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூலை 3, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Vaiko: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் வைகோ திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்றார்….
Thailand’s female prime minister suspended: தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங் டர்ன் ஷினவத்ரா, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Hindu woman raped by local politician: வங்கதேசத்தில் இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி ஃபசூர் அலியை போலீசார் கைது…
Donald Trump: இஸ்ரேல்-ஈரான் இடையே போர் முடிந்து விட்டது; அடுத்த வாரம் அமெரிக்க-ஈரான் ஆகிய நாடுகள் இடையே பேச்சுகள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…
Iranian missile strikes: இஸ்ரேலின் பீர்ஷெபா நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன….
Canada: கனடா நாட்டில் இந்திய மாணவி தான்யா தியாகியின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஏனெனில் இன்னமும் அதிகாரிகள் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்தவில்லை….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்