Japan | ஜப்பானிய விமான நிலையத்தில் புதையுண்டு கிடந்த இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காத அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (செப்.2,2024) வெடித்தது.
இதனால், ஒரு ஓடுபாதையில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. தொடர்ந்து, 80 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், “குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் அருகில் விமானம் எதுவும் இல்லை” என்று நிலம் மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்காப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணையில், 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டினால் வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது. அதன் திடீர் வெடிப்புக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜப்பானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோக்கள், டாக்ஸிவேயில் சுமார் 7 மீட்டர் (கெஜம்) விட்டமும் 1 மீட்டர் (3 அடி) ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைக் காட்டியது.
இது குறித்து, தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், “புதன்கிழமை நண்பகல் நிலவரப்படி விமான நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டாக்சிவே சேதம் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு, வியாழன் காலை விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன” என்றார். மியாசாகி விமான நிலையம் 1943 இல் முன்னாள் இம்பீரியல் ஜப்பானிய கடற்படை விமானப் பயிற்சித் துறையாகக் கட்டப்பட்டது.
இது கடந்த காலத்தில் மிகப்பெரிய போர் விமான இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் வீசப்பட்ட வெடிக்காத பல குண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரினால் வெடிக்காத நூற்றுக்கணக்கான டன் குண்டுகள் ஜப்பானைச் சுற்றி புதைந்து கிடக்கின்றன, சில சமயங்களில் அவை கட்டுமானத் தளங்களின்போது தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Parasakthi: பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது….
Anil Ambani case: அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிவாரண உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை வங்கிகள் அணுகியுள்ளன….
Viksit Bharat G-RAM-G Act: மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் மூலமாக, 125 நாள்கள் வேலை கிராமப்புற மக்களுக்கு உறுதியாக வழங்கப்படும்…
Alyssa Healy announces retirement: ஆஸ்திரேலியா கிரிக்கெட் கேப்டன் அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்….
Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்….
Donald Trump : ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தண்டனை அளிக்கும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….
Donald Trump : ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தண்டனை அளிக்கும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….
Bangladesh: வங்கதேசத்தின் நவ்காவன் மாவட்டத்தில் ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்….
Donald Trump: “தாம் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்….
Former Bangladesh PM Begum Khaleda Zia in Dhaka: வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நல்லடக்க நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்…
Khaleda Zia passes away: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா இன்று (டிச.29, 2025) காலை காலமானார்; அவருக்கு வயது 80….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்