கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Published on: November 22, 2024 at 3:06 pm
Israeli airstrikes on Lebanon | கிழக்கு லெபனான் கவர்னரேட் பால்பெக்-ஹெர்மல் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதன் ஆளுநர் பச்சீர் கோடர் தெரிவித்தார்.
கவர்னரேட் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன. தாக்குதல் நடத்தப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள், காணாமல் போனவர்களை மீட்புக் குழுக்கள் இன்னும் தேடி வருவதாகக் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய இராணுவம் நேற்று(வியாழன் கிழமை) தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் 48 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதே சமயம் தெற்கு லெபனானில் உள்ள 18 எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து சுமார் 100 குண்டுகள் வீசியதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா போராளிகள் மத்திய இஸ்ரேலை ஏவுகணைகளால் தாக்கியதாக தெரிவித்துள்ளனர். “முதல் முறையாக, மத்திய இஸ்ரேலில் கிப்புட்ஸ் ஹட்ஸோர் அஷ்டோட் அருகே அமைந்துள்ள லெபனான் எல்லையில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ஹட்ஸோர் விமான தளத்தை குறிவைத்து தரம்வாய்ந்த ஏவுகணைகள் குவிக்கப்பட்டன. அதில் போர் விமானங்களின் படைகள் உள்ளன. என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஓராண்டாக நடந்து வரும் மோதலில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க ஆஸ்திரேலியா ; 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ; வந்தது புதிய சட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com