TVK Vijay | “திராவிட மாடல், பெரியார், பேரறிஞர் அண்ணா என்ற பெயரில் நம்மை சுரண்டி கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் நம் அடுத்த எதிரி” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டில் பேசினார்.
TVK Vijay | “திராவிட மாடல், பெரியார், பேரறிஞர் அண்ணா என்ற பெயரில் நம்மை சுரண்டி கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் நம் அடுத்த எதிரி” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டில் பேசினார்.
Published on: October 27, 2024 at 11:40 pm
TVK Vijay | நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு தமிழ்ப் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகலோடு தொடங்கியது. இந்நிலையில், மாநாட்டு மேடைக்கு சரியாக நான்கு மணிக்கு விஜய் வருகை தந்தார். தொண்டர்களுக்கு நடுவில் அமைக்கப்பட்ட ரேப்வாக் மேடையில், விஜய் முகம் மலர்ந்த சிரிப்போடு நடந்து வந்தார்.
எதிர்பார்க்க முடியாத அளவில் கூடிய அவரது தொண்டர்களை பார்த்த மகிழ்ச்சியில் விஜய் கண் கலங்கினார். பின்னர் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்சியின் கொள்ளை விளக்க பாடல் வெளியானது. பின்னர் தவெக முதல் மாநாட்டின் உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது. பின்னர் கவர்னர் பதவியை அகற்ற வேண்டும், ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழி வழியிலேயே கல்வி கற்க உறுதி, சாதி வாரி கணக்கெடுப்பு, மதுரையில் தலைமை செயலக கிளை, அனைவருக்கும் விகிதாச்சாரப்படி இடப்பங்கீடு உள்ளிட்ட கட்சியின் செயல் திட்டங்கள் அறிிக்கப்பட்டன.
தவெக மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வீர வாள் வழங்கினார். பின்னர் தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய விஜய், பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம். பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவரது கொள்கையான கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை. வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப்போவதில்லை. பெரியாின், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றை கையில் எடுக்கப் போகிறோம்.
பச்சை தமிழர் காமராஜர் வழியில் தமிழக வெற்றிக்கழகம் செயல்படும். ஊழலில் மலிந்து முகமூடியை அணிந்து கொண்டு நம்மை ஆள்பவர்களே நமது எதிரி. மதவெறி பிடித்தவர்களும் ஊழல்வாதிகளும் ஆகிய இருவரும்தான் நமது எதிரி. நம்மை ஆண்டு கொண்டிருப்பது கரெப்ஷன் கபடதாரிகள்.
மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அரசியலுக்கு வருபவர்களுக்கு உடனே சாயம் பூசுவதையே வேலையாக வைத்துள்ளனர். பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள். அவர்கள் பாசிச ஆட்சி என்றால் நீங்கள் பாயாச ஆட்சியா? வீடு, உணவு வேலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கொடுக்க முடியாத அரசு இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். எல்லோரும் கூத்தாடி கூத்தாடி என்று கூறுகின்றனர். கூத்து என்பது இந்த மண்ணோடும் மக்களுடன் கலந்தது. நான் கூத்தாடிதான். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் உள்ளிட்டோர் அரசிலுக்கு வந்த போதும் கூத்தாடி என்றுதான் கூறினார்கள்.
திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அவலியை சகோதரி அனிதாவை உயிரிழந்த போதும் நான் பெற்றேன். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது.
சினிமா துறையின் உச்சம் அனைத்தையும் விட்டுவிட்டு உங்களை மட்டும் நம்பி வந்துள்ளேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். தவெக -வை ஏ- டீம் பி- டீம் என்று கூறி வண்ணம் தீட்ட முடியாது. இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் எங்களிடம் செல்லாது. பெயரைக் கூறாமல் பேசுவதால் பயம் என்று யாரும் நினைக்க வேண்டாம். யாரையும் விமர்சிப்பதற்காக நாங்கள் வரவில்லை. பேச்சில் அல்ல செயலில் மட்டுமே காட்ட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளோம். என்று பேசினார்.
மேலும், கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பெயர் உள்ளிட்டவை பற்றிய விளக்கம் வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது.
இதையும் படிங்க விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com