₹.13,500 கோடி, ₹.1 லட்சம் கடன்; 4 லட்சம் பேர் காத்திருப்பு: வருமா விஸ்வகர்மா திட்டம்?

Vanathi Srinivasan | தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வகர்மா திட்டத்துக்காக 4 லட்சம் பேர் காத்திருப்பதாக பா.ஜ.கவின் நாகராஜ் கூறியுள்ளார்.

Published on: October 4, 2024 at 5:37 pm

Vanathi Srinivasan | கைவினைக்கலைஞர்களை மேம்படுத்த தமிழக அரசு விஸ்வகர்மா திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் G.K. நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசு கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊக்குவிக்க ரூ.13,500 கோடியில் விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தச்சர்,பொற்கொல்லர் உள்ளிட்ட 18 வகையான கைத்தொழில் புரிவோர் ரூ.1 இலட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையில்லாக் கடன் பெற முடியும்.

தமிழ்நாட்டில் மட்டும் 4 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் தங்களைப் பதிவுசெய்து வங்கியில் பணம் வருவதற்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ இது குலத்தொழில் திட்டம் என்றுகூறி திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

பல மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அதிகளவில் பெண்கள் பயன்பெற்று வரும் வேளையில் தமிழகத்தில் இத்திட்டத்தை புறக்கணிப்பது திமுக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இதுகுறித்து கோவை ராஜவீதி மீட்டிங் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் இத்திட்டத்தின் பயன்குறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் தமிழக பொறுப்பாளர் G.K.நாகராஜ் கலந்து கொண்டு இத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த காலதாமதப்படுத்தினால், புறக்கணித்தால் அடுத்தகட்டமாக கோவையில் கைவினைக்கலைஞர்களை ஒன்றுதிரட்டி விரைவில் மாபெரும் பட்டினிப்போராட்டத்தை நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

த.வெ.க.வில் விஜயதரணி? தமிழக அரசியலில் பரபரப்பு! Vijayadharani

த.வெ.க.வில் விஜயதரணி? தமிழக அரசியலில் பரபரப்பு!

Vijayadharani : தமிழக வெற்றிக் கழகத்தில் பா.ஜ.க. பிரமுகர் விஜயதரணி இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன….

தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை.. நயினார் நாகேந்திரன் Nainar Nagendran

தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை.. நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: “தனிநபர் விலகலால் பாஜகவிற்கு எவ்வித தொய்வும் இல்லை” என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்….

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை.. பாஜக முன்னேறி வருகிறது.. தமிழிசை சௌந்தரராஜன் Tamilisai Soundararajan

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை.. பாஜக முன்னேறி வருகிறது.. தமிழிசை சௌந்தரராஜன்

Tamilisai Soundararajan: தமிழக பா.ஜ.க. முன்னேறி வருகிறது என டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்….

இந்து விரோத அரசியல்.. த.வெ.க.வை சாடிய நயினார் நாகேந்திரன்! Nainar Nagendran

இந்து விரோத அரசியல்.. த.வெ.க.வை சாடிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran : தமிழக வெற்றிக் கழகம் இந்து விரோத அரசியலில் ஈடுபடுவதாக தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்….

புதிய அரசியல் கட்சி…அண்ணாமலை அதிரடி.. பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அறிவிப்பு Annamalai New Party

புதிய அரசியல் கட்சி…அண்ணாமலை அதிரடி.. பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அறிவிப்பு

Annamalai New Party: பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com