ஆன்லைன் மது முன்பதிவு இன்று தொடக்கம்.. எப்படி பெற்றுக்கொள்வது? முழு விவரம்!

Online Liquor Booking: தமிழ்நாட்டில் ஆன்லைன் மது முன்பதிவு இன்று (ஆக.7, 2026) தொடங்கியது; ஆர்டர் செய்த மதுபானத்தை நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Published on: August 7, 2026 at 2:02 pm

சென்னை, ஆக.7, 2026: தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் புதிய மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி நுகர்வோர் டாஸ்மாக் இணையதளம் (tasmac.tn.gov.in) மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். ஆனால், வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்கும் வசதி இல்லை; வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கடைக்கு நேரில் சென்று, இணையத்தில் உருவாக்கப்படும் கியூஆர் குறியீட்டை (QR Code) காட்டி மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே. விக்னேஷ் தெளிவுபடுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், இந்த இணையவழி பணம் செலுத்தும் முறை, டாஸ்மாக் கவுண்டர்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும். மேலும், பணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், வாடிக்கையாளர்களுக்கு சிரமமின்றி மதுபானம் வாங்கும் வசதியையும் ஏற்படுத்தும்.

சிலர் பரப்பிய தவறான தகவல்களை மறுத்த அமைச்சர், “வீட்டுக்கு வந்து விநியோகிக்கும் வசதி எதுவும் இல்லை. இணையம் வழியாக பணம் செலுத்திய பிறகு, வாடிக்கையாளர்கள் கடைக்கு நேரில் சென்று மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என்று வலியுறுத்தினார். இதன் மூலம் விற்பனையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், சட்டவிரோதமாக கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறை, நீதிமன்ற உத்தரவுகளின்படி ஒவ்வொரு விற்பனைக்கும் ரசீது வழங்கப்படுவதை உறுதி செய்யும். மேலும், பாட்டிலில் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) மட்டுமே மதுபானம் விற்கப்படுவதை உறுதி செய்யும். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளில் எந்தெந்த மதுபான வகைகள் கிடைக்கின்றன என்பதை இணையத்தில் சரிபார்க்கும் வசதியும் உள்ளது.

அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது, “இந்த முறை மதுபான விற்பனையில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும். வாடிக்கையாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக 10 ரூபாய் கூடுதல் வசூலிக்கப்படுவதைத் தடுக்கவும் உதவும்,” என்று. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிரமமின்றி, சட்டப்படி, வெளிப்படையான முறையில் மதுபானம் கிடைக்கும் என்றார்.

இதையும் படிங்க : மதுரையில் பால் உற்பத்தி பாதிப்பு.. கடும் வெயில் காரணமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com