என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன் பரப்புரை!

Assembly Election 2026: விருத்தாசலத்தை குடும்பம் போல் பிரேமலதா கவனிப்பார் என்று அவரது மகன் சண்முகப் பாண்டியன் கூறினார்.

Published on: April 12, 2026 at 6:24 pm

கடலூர், ஏப்.12, 2026: தே.மு.திக. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடலூர் விருத்தாசலத்தில் களம் காண்கிறார். இந்நிலையில் அவரது மகன் சண்முகப் பாண்டியன், தே.மு.தி.க வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

முன்னதாக, விருத்தாச்சலத்தில் உள்ள நவாப் ஜாமியா மஜ்ஸித் வழிபாடு நடத்தினார். அவருக்கு அங்குள்ள இஸ்லாமியர்கள் ஆதரவு அளித்தார்கள். இந்த நிலையில் அங்கு பரப்புரை மேற்கொண்ட சண்முகப் பாண்டியன், “என் தந்தை விஜயகாந்த் முஸ்லிம் சமூகத்துடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.

இஸ்லாத்தின் மீதான அவரது அன்பின் காரணமாக, அவர் ஆரம்பத்தில் எனக்கு சௌகத் அலி என்று பெயரிட்டார். ஆனால், கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களால், அது பின்னர் சண்முகப் பாண்டியன் என்று மாற்றப்பட்டது.” என்றார்.

மேலும், “2006-ல் என் தந்தையின் வெற்றியை நீங்கள் உறுதி செய்தது போலவே, 2026-ல் என் தாயின் வெற்றியையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அவர் உங்களுக்கு நல்லது செய்வார். ஒரு பெண் தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது போல, அவர் இந்தத் தொகுதியைக் கவனித்துக்கொள்வார். அவர் உங்களைத் தங்கத் தட்டில் வைத்துத் தாலாட்டுவார்” என்றார்.

இதையடுத்து, ‘நான் விருத்தாச்சலத்தில் மட்டுமல்ல, அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் பிரச்சாரம் செய்வேன், ஏனெனில் என் சகோதரர் விருதுநகரில் போட்டியிடுகிறார். இந்த மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

இதையும் படிங்க: விஜய் டெல்லி பி டீம்.. இனிகோ ஓரிஜினல்.. திருச்சியில் உதயநிதி பரப்புரை!

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி! Defection Row

“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின் பதறவைக்கும் நிமிடங்கள்! Vietnam Boat Tragedy

‘3 நிமிடங்களில் படகு தலைகீழானது’… வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழரின்

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய் Perambur MLA Office

மக்கள் சேவைக்கு புதிய முகவரி! பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com