Palani Rope Car | பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் வசதி 40 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு செல்ல பெரும்பாலானோர் படிக்கட்டுகளை பயன்படுத்தினாலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயங்கும். இந்நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக திங்கள் கிழமை முதல் அடுத்த 40 நாட்களுக்கு ரோப் கார் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
அதுவரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் அல்லது மின்சார ரயில் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க
OS Manian: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார்; அதே நேரம் திமுக தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார் ஓ எஸ் மணியன்….
Praveen Chakravarthy: தமிழக காங்கிரசுக்கு 12 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்; கடந்த மாதம் திமுக காங்கிரஸ் கூட்டணியில்…
Arun Raj: திமுக அதிகாரிகளை வைத்து தமிழக வெற்றி கழகத்தை மிரட்டுகிறது என த.வெ.க மூத்த நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார்….
DMK Alliance Meet in Puducherry: புதுச்சேரியில் திமுக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; அதே நேரம் மற்ற கூட்டணி கட்சிகளான…
Annamalai Targets DMK: திமுக நிறுவனர் அண்ணா என்ற பசு மீது அமர்ந்திருக்கும் காக்கா தான் இன்றைய திமுக என விமர்சித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்