Chennai Mayor Priya : “தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க) ஏன் வாக்களித்தோம் என மக்கள் நினைக்கிறார்கள்” என மேயர் பிரியா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Mayor Priya : “தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க) ஏன் வாக்களித்தோம் என மக்கள் நினைக்கிறார்கள்” என மேயர் பிரியா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: June 24, 2026 at 3:24 pm
சென்னை, ஜூன் 24, 2026: சென்னையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா, மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிப்படையாகக் கூறினார். “தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என வருத்தப்படுகின்றனர்; சென்னையில் மின்வெட்டால் மக்கள் அவதியுறுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
மின்வெட்டு பிரச்சினை காரணமாக பல பகுதிகளில் மக்கள் அவதியுறுவதாகவும், அடிப்படை வசதிகள் பாதிக்கப்படுவதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார். குறிப்பாக, வெப்பமான காலநிலையில் மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை சந்திக்கின்றனர்.
அவர் மேலும், மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்த நிலையில், தற்போது அவர்கள் எதிர்பார்த்த சேவைகள் கிடைக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது என வலியுறுத்தினார். மின்சார துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க : திருச்செந்தூர் கோவிலில் கட்டண உயர்வு இல்லை.. அமைச்சர் ரமேஷ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com