DMK MP Kanimozhi: ‘அமைச்சர் பொன்முடி பேசிய விவகாரத்தில் நான் ஏற்கனவே எனது கண்டனத்தை பதிவு செய்து விட்டேன்; அது குறித்து பேச விரும்பவில்லை’ என்ன கனிமொழி பேசினார்.
DMK MP Kanimozhi: ‘அமைச்சர் பொன்முடி பேசிய விவகாரத்தில் நான் ஏற்கனவே எனது கண்டனத்தை பதிவு செய்து விட்டேன்; அது குறித்து பேச விரும்பவில்லை’ என்ன கனிமொழி பேசினார்.
Published on: April 11, 2025 at 9:07 pm
சென்னை ஏப்ரல் 11 2025: அதிமுக, பாஜக கூட்டணி இன்று ( ஏப்ரல் 11 2025) இறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து, திமுக எம்பி கனிமொழி விமர்சித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்து தலைவர் தான் அறிவிக்க வேண்டும்; ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மௌனமாக இருக்கிறார். அவரால் பேசக்கூட முடியவில்லை” என்றார்.
எடப்பாடி பழனிச்சாமியின் செயல் தமிழக மக்களுக்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம். பாஜகவுடன் கூட்டணியை அறிவிக்கும் நிர்பந்தத்திற்கு அதிமுகவினர் ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும், அண்ணா, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிவரோடு கூட்டணியை அமைத்திருக்கிறார் என்றார்.
தொடர்ந்து, ‘தமிழ்நாடு மக்கள் இவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்; மணிப்பூர் இன்றளவும் பற்றி எரிகிறது’ என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கனிமொழியிடம் பொன்முடி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த கனிமொழி, ” அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. ஒரு விஷயத்தில் எத்தனை முறை நடவடிக்கை எடுப்பார்கள். இந்த விஷயத்தில் எனது கண்டனத்தை பதிவு செய்து விட்டேன். இது குறித்து பேச விரும்பவில்லை” என்றார்.
இதையும் படிங்க அண்ணாமலை இல்லை.. தமிழக பாஜக புதிய தலைவர் இவர்தான்.. பரபரப்பு தகவல்கள்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com