சென்னை, மார்ச் 4, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாளுஅம்மாளின் உடல்நிலை குறித்து விசாரிக்க அவரின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி இன்று ( மார்ச் 4 2025) காலை மருத்துவமனைக்கு வந்தார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தயாளு அம்மாளின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் வந்தார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 3 2025) இரவு அனுமதிக்கப்பட்டார்.
கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மு க ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்தார்.
தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், என்ற செய்தி அறிந்து திருவாரூரில் இருந்து உடனடியாக திரும்பிய மு க ஸ்டாலின் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் இன்றும் மு க ஸ்டாலின் திருவாரூர் சென்று தாயாரின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘2006 இல் கலைஞர் ஆட்சி தொடரும் என்றார் வடிவேல்.. ஊத்திக்கிச்சு’.. செல்லூர் ராஜு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்