Gianinna Maradona testifies in negligence trial : கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பான கவனக்குறைவு வழக்கில், மரடோனாவின் மகள் மருத்துவரை கடுமையாகச் சாடியுள்ளார்.
Gianinna Maradona testifies in negligence trial : கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பான கவனக்குறைவு வழக்கில், மரடோனாவின் மகள் மருத்துவரை கடுமையாகச் சாடியுள்ளார்.

Published on: April 22, 2026 at 3:36 pm
பியூனஸ் அயர்ஸ், (அர்ஜென்டினா), ஏப்.22, 2026: டியாகோ மரடோனாவின் மகள்களில் ஒருவரான ஜியானினா மரடோனா, தனது தந்தை இறந்த நேரத்தில் அவரது முதன்மை மருத்துவராகக் கருதப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லியோபோல்டோ லூக்கைக் கடுமையாகச் சாடினார்.
2020-ல் தனது தந்தையின் மரணத்தில் அலட்சியம் காட்டியதாகக் மருத்துவர்கள் 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில், சான் இசிட்ரோவில் உள்ள நீதிமன்றத்தில் ஜியானினா மரடோனா சாட்சியமளித்தார்.
இது குறித்து பேசிய ஜியானினா மரடோனா, “அவர் தனது தந்தையின் மருத்துவர் அல்ல என்று தொலைக்காட்சியில் கூறியதைக் கேட்டேன், அவர் பொறுப்பேற்க மறுப்பது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
வழக்கு என்ன?
பியூனஸ் அயர்ஸுக்கு வெளியே உள்ள ஒரு வீட்டில் மரடோனா இறப்பதற்கு முந்தைய வாரங்களில், அவரது மருத்துவக் குழுவினர் போதுமான சிகிச்சையை வழங்கத் தவறியதாக இந்த அலட்சிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்கான அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்து வந்த நிலையில், மாரடோனா தனது 60வது வயதில் மாரடைப்பால் காலமானார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : அஜித் அகர்கர் ஒப்பந்தம் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. பி.சி.சி.ஐ முடிவின் பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com