டோக்கியோ, ஜூலை 18 2026 : டோக்கியோ: ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் இருமுறை ஒலிம்பிக் பதக்க வெற்றியாளரான பி.வி. சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் முன்னாள் உலக சாம்பியனும், உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையுமான நொசோமி ஒகுஹாரா உடல்நலக் காரணங்களால் போட்டியில் இருந்து விலகியதால், சிந்து வாக்ஓவர் (Walkover) மூலம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
டோக்கியோ மெட்ரோபாலிட்டன் ஜிம்னேசியத்தில் நடைபெற இருந்த காலிறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, உலகின் முதல்நிலை வீராங்கனையான தென் கொரியாவின் அன் சே-யங் விலகியதால், ஒகுஹாரா காலிறுதிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்து, அரையிறுதியில் சீனாவின் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான சென் யூஃபெய்யை நாளை (ஜூலை 19) எதிர்கொள்கிறார். இதற்கு முன்பு, காலிறுதிக்குத் தகுதி பெறும் ஆட்டத்தில் சீனாவின் உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான ஹான் யூவை சிந்து வீழ்த்தி சிறப்பான வெற்றி பெற்றிருந்தார்.
இந்த ஆண்டில் நடைபெறும் BWF வேர்ல்ட் டூர் தொடர்களில், மலேசியா ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஜப்பான் ஓபன் தொடரிலும் பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த முறை பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சிந்து களமிறங்க உள்ளதால், இந்திய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிசிசிஐ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்