Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?
Mythology: ஐந்து பேரின் சடலங்கள் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரியுமா?
Published on: April 21, 2025 at 1:57 pm
காசிக்கு சென்றால் முக்தி கிடைக்கும் என்று இன்றளவும் எல்லோராலும் நம்பப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இறந்தவர்களின் உடல்கள் காசியில் தகனம் செய்யப்படுவது வழக்கம். காசியில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதால் அவர்களின் ஆத்மா நேரடியாக சொர்க்கத்திற்கு செல்கிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் ஐந்து பேர்களின் உடல் காசியில் எரிக்கப்படுவதில்லை என்பது நாம் யாரும் அறிந்திடாத உண்மை.
அது யார் என்றால், சாதுக்களின் உடல்கள் காசியில் எரிக்கப்படுவதில்லை. அவர்களின் உடல் தண்ணீரில் மூழ்கடிக்கப்படுகிறது அல்லது தரையில் புதைக்கப்படுகிறது. எரிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை ஏனென்றால் அவர்கள் இறைவனின் ரூபமாகவே கருதப்படுகின்றனர்.
பிரபஞ்சத்தை இயக்கும் 9 விதிகள் ; கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னவை என்ன ?
கர்ப்பிணி பெண்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை ஏனெனில் இவர்களை எரிப்பதால் வயிறு வெடிக்கக்கூடும் என்பதால் இவர்களின் உடல்களும் தகனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. பாம்பு கடித்து மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்படுவதில்லை ஏனெனில் இவர்களின் உடலில் மூளை மட்டும் 21 நாட்கள் உயிருடன் இருக்கும்.
எனவே இவர்களை தண்ணீரில் மிதக்க விடுவதால் மீண்டும் உயிர்பிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால் பாம்பு கடித்தவர்களையும் காசியில் எரிப்பதில்லை. தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் அவர்களின் உடலும் காசியில் எரிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இதையும் படிங்க : நெஞ்சை பிளந்த அனுமன்; வியந்து பார்த்த சபை: அன்று நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com