‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயல்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Published on: November 25, 2024 at 12:30 pm

Updated on: November 25, 2024 at 12:46 pm

Winter Session of Parliament | நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 25) துவங்கியுள்ளது. வக்ஃப் சட்ட திருத்தத்திற்கான அனைத்து முக்கிய முன்மொழிவு உட்பட, 16 அத்தியாவசிய அரசு மசோதாக்கள் விவாதத்திற்கு வரிசையாக உள்ளன.

தற்போது அனைத்துக் கட்சிக் குழுவின் பரிசீலனையில் உள்ள வக்ஃப் (திருத்த) மசோதா, நடப்பு கூட்டத்தொடரில் அதன் பரிந்துரைகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழு தனது முடிவுகளை முன்வைக்க கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீடிப்புக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அதானி வழக்கு, மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு இக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் குளிர் கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற விவாதத்தில் அதிக எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். நாளை 75 வது அரசியல் அமைப்பு தினம் நாடாளுமன்றத்தில் கொண்டாடப்படும். இக்கொண்டாட்டத்தின் போது நாடாளுமன்ற கூட்டத்துடன் எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும். அவையில் நடைபெறும் அமலிகளால் இளம் எம்பிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் இதுவரை பேசியதில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதிர்கட்சிகள் எப்பொழுதும் செயல்பட்டதில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அமலில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவை இன்று உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது. நாடாளுமன்றத்தின் நேரத்தை பயன்படுத்துவதும் சபையில் நமது நடத்தையையும் உலக அளவில் இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் மரியாதையை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மணிப்பூர் கலவரம் அதானி விவகாரம், போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அமளி செய்ததால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com