திவிஷா சர்மா வழக்கு.. சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்படுமா? பரபரப்பு தகவல்கள்!

CBI Probe Ordered : திவிஷா சர்மா மரண வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 25, 2026 at 12:00 pm

புதுடெல்லி, மே 25, 2026 : முன்னாள் நீதிபதி தொடர்பான வழக்கு என்பதால், திவிஷா சர்மா மரணம் தொடர்பான விசாரணையை உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சி.பி.ஐ)-க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், குடும்பத்தினர் மற்றும் ஊடகங்கள் பொது அறிக்கைகள் வெளியிடாமல், சட்டப்படி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

திவிஷா சர்மா மரணம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர் முன்னாள் நீதிபதி என்பதால், சி.பி.ஐ விசாரணை அவசியம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்டவர் முன்னாள் நீதிபதி என்பதால், உருவாகும் கதைக்களத்திற்கு எதிராக விசாரணை நடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

இந்நிலையில், நீதிமன்றம் ஊடகங்களை அளவுக்கு மீறிய செய்தி வெளியீடுகளை தவிர்க்க கேட்டுக்கொண்டது. மேலும், “பாதிக்கப்பட்டவரின் குடும்பம் அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல், சட்டப்படி விசாரணை நடைபெற அனுமதிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, போபாலில் இரண்டாவது உடற்கூறு நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர் துஷார் மேத்தா நீதிமன்றத்தில், மாநில அரசு சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்ற பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மம்தா கட்சி மாயம்.. 1 லட்சம் வாக்குகளில் பா.ஜ.க வெற்றி.. மறுதேர்தல் முடிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com