Maharashtra | மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) வரவிருக்கும் மாநில சட்டசபை தேர்தலுக்கான சீட் பகிர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. மொத்தமுள்ள 288 இடங்களில் 260 இடங்களைப் பிரிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதில், காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகிய முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றன. இதற்கான கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை (அக்.17, 2024) நடைபெற்றது.
260 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்னும் 28 இடங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, மூன்று முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு உரிமை கோரியுள்ளதால், இந்த இடங்கள் பேச்சுவார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது எனத் தெரியவருகிறது.
இது குறித்து, மூத்த தலைவர் ஒருவர், இன்று மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால், கட்சிகள் இறுதி உடன்படிக்கைக்கு செயல்படுவதால், சனிக்கிழமையும் அவை தொடரலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் கட்சியின் வலுவான செயல்திறன் பேச்சுவார்த்தைகளில் மேற்கோள் காட்டப்பட்டதால், காங்கிரஸுக்கு 110 முதல் 115 இடங்கள் வரை கொடுக்க கூட்டணி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சிவசேனா (UBT) 83 முதல் 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்புள்ளது, குறிப்பாக மும்பை மற்றும் கொங்கன் பெல்ட்டில் அதன் கோட்டைகளில் கவனம் செலுத்துகிறது. NCP (SP) 72 முதல் 75 இடங்களில் போட்டியிட உள்ளது, மேற்கு மகாராஷ்டிராவில் அதிக கவனம் செலுத்துகிறது, இது அவர்களுக்கு ஒரு முக்கியமான போர்க்களமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Ruckus in Lok Sabha: வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதிலளிக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….
Congress MP Rahul Gandhis ‘gaddar’ jibe: சீக்கிய அமைச்சரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் கூறியுள்ளார்….
M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது….
PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில்…
Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை…
Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்