Jharkhand Assembly Elections 2024 | ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) உடன் இணைந்து போட்டியிடாது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இடதுசாரி கட்சிகளின் கூற்றுப்படி, கூட்டணியில் போட்டியிட அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், “ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி இடதுசாரி கட்சிகளுக்கு எந்த இடத்தையும் கேட்டாலும் கொடுக்கவில்லை” என்றும் இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
ஜார்க்கண்ட் கூட்டணியில் ஜே.எம்.எம். 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி 6 தொகுதிகளிலும் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பேசிய இடதுசாரி தலைவர் ஒருவர், “காங்கிரஸ் தங்களுக்கு போட்டியிட ஓர் இடம் தருவதாக வாக்குறுதி அளித்தது” என்றார்.
மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதன்கிழமை 9 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தது. சிபிஐ(எம்) வேட்பாளர்கள் தமர், பஹரகோரா, மந்தர், ஜமா, பாகூர், ஜம்தாரா, மகேஸ்பூர், சிசாய் மற்றும் சத்ரா உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில், தமர், சிசாய், மகேஸ்பூர், ஜமா மற்றும் மந்தர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் (எஸ்டி) ஒரு இடமும், சத்ரா பட்டியல் சாதியினருக்கும் (எஸ்சி) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமர், சிசாய், மந்தர், பஹரகோரா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்: பின்வாங்கிய காங்கிரஸ்: சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டி!
Rahul Gandhi PM candidate; ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அதில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்….
Vande Mataram : வந்தே மாதரம் பாடலின் 4 பத்திகளை காங்கிரஸ் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது; இது ஏன்? முதல் இரு பத்திகள் மற்றும் பிற நான்கு பத்திகள்…
Rahul Gandhi Protest : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று (ஆக.21, 2026) திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்….
Rahul Gandhi Assets Case : காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
Jharkhand student protests; ஜார்கண்டில், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேர்வர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதலமைச்சர் பதவி விலக நேரிடும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்