Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 29 தொகுதிகளுடன் பாரதிய ஜனதா 2ம் இடம் வகிக்கிறது.
நான்காம் இடத்தில் உள்ள காங்கிரஸ் வசம் 6 தொகுதிகள் மட்டுமே உள்ளன. பி.டி.பி.யிடம் 4 தொகுதிகளும் உள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஆகஸ்ட் 5, 2019 அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் (பிரிவு 370 ரத்து) மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்து நிரூபித்துள்ளனர்” என்றார்.
மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்று சுதந்திரமாகச் செய்ததற்காக அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். முடிவுகளுக்காக நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் “துன்பங்களுக்கு” முடிவு கட்ட நிறைய வேலைகளைச் செய்யும்” என்றார்.
இதையும் படிங்க ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க, தேசிய மாநாட்டு கட்சி இடையே போட்டி: உமர் அப்துல்லா
Supreme Court Chaos : இரு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….
Sonam Wangchuk: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது….
Narendra Modi On Kamaraj : இந்திய சுதந்திர போராட்ட வீரர், நாட்டை கட்டமைக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்…
Bhojshala issue : போஜசாலா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த திறந்தவெளி இடம் வழங்குமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….
2020 Delhi riots: 2020-ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தின்போது நடைபெற்ற அங்கித் சர்மா கொலை வழக்கில் தாஹிர் உசைனை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்