இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல்.. என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு?

Uday Bhanu Chib: பாரத் மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் பிரமுகருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

Published on: February 24, 2026 at 7:52 pm

புதுடெல்லி, பிப்.24, 2026: டெல்லி நீதிமன்றம், இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிபுக்கு நான்கு நாள் போலீஸ் காவலை வழங்கியுள்ளது. ஏ.ஐ இம்பேக்ட் மாநாடு 2026 நடைபெற்ற பாரத் மண்டபத்தில் நடந்த போராட்டத்தில் அவர் முக்கிய சதி திட்டமிடுபவராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

டெல்லி போலீஸ், சிபும் அவரது கூட்டாளர்களும் சட்டவிரோதக் கூட்டம் நடத்தியதோடு, போலீஸ் அதிகாரிகளை தடுத்தும் தாக்கியதாக கூறியுள்ளது. எனினும், இது தொடர்பாக விசாரணை தொடர்ந்துவருகிறது. இதற்கிடையில், சிபுக்கு, மதம், இனம், பிறப்பிடம், மொழி போன்ற அடிப்படையில் பகைவை தூண்டும் பி.என்.எஸ் பிரிவு 196 உட்பட பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கு தற்போது டெல்லி போலீஸ் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளா கேரளம் என பெயர் திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com