இது தேர்தல் கட்டணம்.. அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயரும்.. ராகுல் காந்தி எச்சரிக்கை

‘Election Bill’ Row on LPG : இந்தியாவில் அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Published on: May 1, 2026 at 8:37 pm

புதுடெல்லி, மே1, 2026: அமெரிக்கா- ஈரான் மேற்காசிய மோதலால் உலகளாவிய எரிசக்தி விலை உயர்வின் தாக்கம் இந்தியாவில் பெரிதாக உணரப்படுகிறது. வெள்ளிக்கிழமை, வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.993 உயர்த்தப்பட்டது. இது இதுவரை நடந்த மிகப்பெரிய ஒரே நாளின் உயர்வு ஆகும்.

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு:

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இது தேர்தல் பில். அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படும்” என எச்சரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மற்றொரு தலைவரான கே.சி. வேணுகோபால், “தேர்தல் முடிந்தவுடன் அரசு விலை உயர்த்தியது. சிறிய உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் அனைத்தும் பாதிக்கப்படும்” என குற்றச்சாட்டியுள்ளார்.

விலை உயர்வு விவரம்:

  • பிப்ரவரி முதல் மூன்று மாதங்களில் ரூ.1,380 உயர்வு.
  • 19 கிலோ வணிக எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 81% அதிகரிப்பு.
  • சிறிய உணவகங்கள், ஹோட்டல்கள், இனிப்பு கடைகள், பேக்கரிகள் அனைத்தும் கூடுதல் சுமையைச் சந்திக்கின்றன.

இதையும் படிங்க : ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி செயலாளர்.. ஜெயஸ்ரீ ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு.. யார் இவர்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com