Assembly Election 2026: டெல்லி சென்றது ஏன் என்பது குறித்து முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மாநகர எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.
Assembly Election 2026: டெல்லி சென்றது ஏன் என்பது குறித்து முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மாநகர எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.
Published on: March 25, 2025 at 6:44 pm
புதுடெல்லி மார்ச் 25 2025: அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ( மார்ச் 25 2025) திடீர் பயணமாக டெல்லி சென்றார். எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பயணம் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சில சந்தேகங்களை எழுப்பினார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தனது டெல்லி பயணத்தின்போது இரு மொழி கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் புதுடெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் இருமொழி கொள்கை குறித்து நீங்கள் வலியுறுத்தினீர்களா என மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் என்றனர்.
இது தொடர்பாக பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே இது குறித்து பேசி ஆகிவிட்டது என்றார். முன்னதாக செய்தியாளர்கள் டெல்லியில் முக்கிய நபருடன் நீங்கள் சந்தித்தீர்களா என கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, “டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன்” என்றார். அப்போது நாங்கள் எதற்கு இங்கு வந்தோம் என தெரியாமலே நீங்கள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளோம்; ஏற்கனவே இருமொழி கொள்கை குறித்து நாங்கள் பேசிவிட்டோம்” என்றார்.
இதையும் படிங்க: பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி? வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com